states

img

1000 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டிற்கு தயாராகிறது மதுரை

மதுரை, அக். 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, ஏப்ரல்  2 முதல் 6 வரை, தமிழ்நாட்டில் - மதுரை யில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது.  மாநாட்டை வெற்றிகரமாக நடத்து வதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமையன்று  (அக். 22) நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாந கர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வரவேற்றார்.  அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. சாமு வேல்ராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத் தாய், எஸ்.பாலா மற்றும் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தலைவர்கள்

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய 24-ஆவது மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், வரவேற்புக் குழுச் செயலாளராக மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.,  வரவேற்புக்குழுத் பொருளாளராக மாநி லச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

வரவேற்புக்குழு புரவலர்கள் - சிறப்புத் தலைவர்கள்

மேலும், வரவேற்புக்குழு புரவலர் களாக- மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மூத்த தலைவர் வே. மீனாட்சிசுந்தரம், பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர் அருணன், மூத்த  வழக்கறிஞர் ஆர். வைகை, திரைக் கலைஞர் ரோகிணி ஆகியோரும், வர வேற்புக்குழு சிறப்புத் தலைவர்களாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், ஏ.கே. பத்மநாபன், அ. சவுந்தரராசன், எஸ்.ஏ. பெருமாள், ஏ. லாசர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உதவித் தலைவர்கள் -  உதவிச் செயலாளர்கள்

இவர்கள் தவிர உதவித் தலைவர் களாக கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ப. செல்வசிங், எஸ். நூர்முகமது, என். குணசேகரன், ஜி. சுகுமாறன், க.  பாலபாரதி, என். பாண்டி, டி. ரவீந்திரன், மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கரு மலையான், மாநிலக்குழு உறுப்பினர் கள் நாகை மாலி எம்எல்ஏ, இரா. விஜயராஜன், கே. சுவாமிநாதன், எழுத் தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும்; உதவிச் செயலாளர்களாக மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. சாமு வேல்ராஜ், எஸ். கண்ணன், செ. முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, மா. கணேசன், கே.ராஜேந்திரன், மா. சின்னத்துரை எம்எல்ஏ, ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வீ.அமிர்தலிங்கம், எஸ்.கே. பொன்னுத் தாய், அ. ராதிகா, எஸ்.பி. ராஜேந்திரன், எஸ். பாலா, ஏ.வி. சிங்காரவேலன் மற்றும் எஸ். கார்த்திக், த. செல்லக்கண்ணு, கோ.அரவிந்த்சாமி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1000 பேர் கொண்ட வரவேற்புக்குழு

இவர்களுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், அழைப்பாளர்கள், மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநில அரங்கங்களின் உபகுழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 1000 பேர் கொண்ட மாபெரும் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.   மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் நன்றி கூறினார்.