districts

img

கிராமங்கள் தோறும் புதிய கிளை நூலகம்!

வாலிபர் சங்கம் வலியுறுத்தல் தருமபுரி, அக்.22- கிராமங்கள் தோறும் புதிய கிளை நூலகம் துவங்க  வேண்டும் என, வாலிபர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பாலக்கோடு வட்ட பேரவை கூட்டம், பாலக்கோடு தனியார் திருமண மண் டபத்தில் திங்களன்று, வட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், நிர்வாகிகள் கோவிந்தசாமி, மீரா ஆகியோர்  பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.நாக ராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், மாதர் சங்க நிர்வாகி  பாண்டியம்மாள், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.  இதில், பாலக்கோடு பகுதியில் தக்காளி  பதனிடும் தொழிற்சாலை மற்றும் மாங்கூழ்  தொழிற்சாலை அமைக்க வேண்டும். பாலக் கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். தொழிற் பேட்டை அமைத்து, வேலை தேடும் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண் டும். பாலக்கோடு நகரில் உள்ள நூலகத்தை மைய நூலகமாக தரம் உயர்த்தி, கிராமங் கள் தோறும் புதிய கிளை நூலகம் துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத் தின் பாலக்கோடு வட்டத் தலைவராக பி. கோபி, செயலாளராக பி.கோவிந்தசாமி,  பொருளாளராக மீரா, துணைச்செயலாளர் களாக ரவி, அருள் குமார், துணைத்தலைவர் களாக தேவிஸ்ரீ, சத்தியராஜ் உட்பட 21 வட் டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர்.