districts

img

தோழர் வி.பி.எஸ் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், அக்.22- தோழர் வி.பி.சாமிநாதனின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்.22 அன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி  நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை வலுபடுத்தியதில் முக்கிய பங்காற்றிய தோழர் வி.பி.சாமிநா தனின் 5ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் கிளை அலு வலகம் முன்பும், வலசுப்பாளையத்திலும் நினைவஞ்சலி நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. பெருமாநல்லூர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச் சிக்கு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியத்தலைவர் கே.ரங்க சாமி தலைமை ஏற்றார். வலசுப்பாளையத்தில் அவரது நினை வுக் கல்வெட்டு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விவசாயிகள்  சங்க வடக்கு ஒன்றியச்செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை  வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் ஆர்.குமார், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், மூத்த தோழர் பழனிச்சாமி, விவசாயி கள் சங்க மாவட்டத் துணைச்செயலாளர் வெங்கடாசலம் ஆகி யோர் தோழர் வி.பி. சாமிநாதன் குறித்து பேசினர். கட்சியின்  வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, என்.இளங்கோ, வள்ளிபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் வி.என். முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.