districts

img

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாத்திடுக

நாமக்கல், அக்.22- மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண் டும், என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மரவள்ளிக்கிழங்கின் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கிற்கு நியாயமான விலை கிடைத்திட, தமிழக அரசு முத்த ரப்பு கூட்டத்தை கூட்டி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாயன்று நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.ஆதி நாராயணன், துணைத்தலைவர் வேலாயுதம், ஒன்றி யத் தலைவர் மனோகரன், செயலாளர் செல்வராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணன், சிஐடியு நிர்வாகி ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.