tamilnadu

img

திருவெண்ணெய்நல்லூர் அமைப்பு செயலாளர் தேர்வு

விழுப்புரம், டிச. 12- விழுப்புரம் மாவட்டம், கடந்த  சில நாட்களுக்கு முன்பு கள்ளக்  குறிச்சி, விழுப்புரம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்த போது திரு வெண்ணெய்நல்லூர் ஒன்றிய மாக இருந்து வந்தது. மாவட்ட பிரி வினைக்கு பிறகு திருவெண் ணெய்நல்லூர் தற்போது தாலு காவாக மாறி விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  திருவெண்ணெய்நல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதிய தாலுகா அமைப்புக் குழு தேர்வுக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கே.ராணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டு உள்ள திரு வெண்ணெய்நல்லூருக்கு அடிப் படை வசதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்கள் கொண்டு வரவேண்டும், தென்பெண்ணை ஆற்றின் மூலமாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப் பணைகள் கட்டவேண்டும், பெரியசெவலை கூட்டுறவு கரும்பு ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலுகா அமைப்புச் செயலாள ராக கே.சிவக்குமார் தேர்வு செய்  யப்பட்டார். தாலுகாகுழு உறுப்பி னர்களாக ஜெயராமன், எஸ்.குமார்,  ஆர்.வீரன், வி.பழனி, கே.ராணி, வி. கமலநாதன், ராஜேஷ்குமார், சிவ ராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிக ளாக தேர்வு செய்யப்பட்டனர்.