tamilnadu

img

பயிர் காப்பீட்டுத் திட்டம்-  ‘இ’ பயிர் மருத்துவ முகாம்

மணலூர்பேட்டை,நவ.26- சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், காபி என்கிற பன்னாட்டு நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து மணலூர்பேட்டை கிளை நூல கத்தில் நடத்திய புகைப்படம் அடிப்படையிலான தனிப்பட்ட  பயிர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இ பயிர் மருத்துவ முகாம் நிகழ்ச்சியை வாசகர் வட்டத் தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை  வகித்தார். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தே.ச.கிரிஜா தலை மையிலான புதுச்சேரி மருத்துவர் ஷோபனா குழுவினர் பங்கேற்ற பயிர் மருத்துவ முகாமில் மணலூர்பேட்டை மற்றும்  தேவரடியார்குப்பம் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமப் பகுதி விவ சாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பாதிப்படைந்த பயிர்களை மருத்துவர்களிடம் காண்பித்து பிரச்சனையையும் அதன் தீர்வுகளையும் கேட்டறிந்தனர். மேலாண்மை பரிந்து ரைகளை அவர்களுடைய கைப்பேசிக்கு தமிழ் வழியில் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைத்தனர். பின்னர் மணலூர்ப்பேட்டை, ஜம்பை - பள்ளிச்சந்தல், மேலந்தல், காங்கேயனூர், தேவரடியார்குப்பம் மற்றும் சித்தப்பட்டிணம் கிராமங்களுக்கு நேரில் சென்று நெல் வய லில் கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் உழவர்காம் செயலி  மூலம் தனிப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்தும் புதிய  வகை பயிர் காப்பீட்டு திட்டத்தை சோதிக்கும் வகையில் மொபைல் போன் கேமரா படங்கள் மூலம் சோதித்து பயிர்  காப்பீடு வழங்க சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறு வனம் முடிவு செய்துள்ளதை விளக்கி மு.செந்தில்குமார் ருணாயஎயச ஊயஅ செயலியை பதிவிறக்கம் செய்து விவசாயிகளின் விவரம் மற்றும் நெல் வயலின் விபரம் பதிவு செய்தார். நூலகர் மு.சாந்தி, பணியாளர்கள் சுந்தரி, மு.கோவிந்தன், கி.பாஸ்கரன், ஏ.அய்யப்பன், பெ.விக்னேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.