லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில், சாமியார் ஆதித்யநாத் தலைமை யிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே, மாடுகளுக்கு அதிக முக்கிய த்துவம் அளித்துவரும் இந்த அரசு,மாநிலம் முழுவதும் 750 கோசாலைகளை குடிநீர் மற்றும் தீவன வசதியுடன் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்காக, 16 மாநகராட்சி களுக்கு தலா 10 கோடி ரூபாய் விகிதம் 160 கோடி ரூபாய் நிதிஒதுக்கியது. இதனை பட்ஜெட் டில் சரிக்கட்டுவதற்காக, பொது மக்களிடம் அரை சதவிகிதம் ‘செஸ்’ வரி விதித்தது.
உத்தரப்பிரதேசத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள், காவலர் குடியிருப்புகள் மட்டுமன்றி, சிறைச்சாலைகளிலும்கூட மாட்டுக்கொட்டகை அமைத்து மாடுகளை பராமரிக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாகி இருக்கிறது.
இந்நிலையில் பசு பாது காப்பு தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோச னை நடத்திய, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் பசு கொட்டகைகளின் தரத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்; கொட்டகை கள் எந்த பொருளால் அமைக்கப் பட்டுள்ளன என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளார். அத்துடன், பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றையும் பாதுகாத்தாக வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.