உடுமலை, ஜூலை 13- இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் சனியன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை வட்டம், குடிமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த இரண்டாண்டுகளாக தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளதை பல முறை அரசு அதிகாரிகளிடம் மாணவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை யடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் குடிமங்கலம் அரசு மேல் நிலை பள்ளியை மாணவர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பத்து நாட் களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி அளித்தனர். இதன் பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.