tamilnadu

கரூர் மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் ஆய்வு

கரூர், ஜூலை 1- கரூரில் ரூ.269.59 கோடி மதிப்பில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமை யில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, கோட்டாட்சியர் சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்தாண்டு மார்ச் 1-ம் தேதி இப்பணிகள் தொடங்கப் பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி நகரின் மையப் பகுதியான காந்தி கிராமத்தில் 17.45 ஏக்கர் பரப்பில் உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனைத்து பணிகளும் முடி வுற்றதால் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கழகம் அனு மதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.