tamilnadu

ஸ்ரீரங்கம் ஒய் சாலை பகுதியில் 2 நாட்களில் 5 பேர் விபத்தில் பலி

ஸ்ரீரங்கம் ஒய் சாலை பகுதியில் 2 நாட்களில் 5 பேர் விபத்தில் பலி

விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஏப்.15-  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவி லூர் அருகேயுள்ள மேமாலூர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் விஜய் (25). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், ஊர் ஊராகச் சென்று தங்கியி ருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு பட்டு வந்தார்.  இவரது மனைவி அருள்மேரி(22). இவர்களது 7 மாத கைக்குழந்தை அந் தோணி ஜோஸ்வா. சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டையில் கரும்பு வெட்டும் பணிக் காக, தனது மனைவி அருள்மேரி, மகன் அந்தோணி ஜோஸ்வா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திருச்சி திருவரங்கம் ஒய்  சந்திப்பு பகுதியில் ஞாயிறன்று காலை  வந்த போது, அவர்களுக்கு பின்னால்  வந்த வேன், இருசக்கர வாகனத்தின்மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அலெக்ஸ் விஜய், மனைவி மற்றும் குழந் தையுடன் கீழே விழுந்துள்ளார். வேன் சக்கரங்கள் ஏறியதில் அருள் மேரியும், குழந்தை அந்தோணி ஜோஸ்வாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அலெக்ஸ் விஜையை அக்கம்  பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அலெக்ஸ்  விஜய்யும் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் நிற்கா மல் சென்று விட்டது. தகவல் அறிந்த  காவல்துறையினர், அந்த வேனை சுமார்  5 கி மீ தூரம் விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் வேனை ஓட்டியது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த கதிரேசன்(43) என தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சி வடக்கு போக்கு வரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீரங்கம் ஒய் ரோடு சந்திப்பு பகுதி யில் சனிக்கிழமை அதிகாலை, இதேபோல்,  இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் தாய் - மகள் இருவர் உயிரிழந்த னர். ஒரே இடத்தில் இரு நாள்களில் நடந்த  இரு விபத்துகளில் 5 பேர் பலியாகியுள்ள னர். தொடர்ந்து அப்பகுதியில் விபத்து களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரு வதால், அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.