tamilnadu

தஞ்சை- நாகை நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு

மன்னார்குடி, மார்ச் 1-  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ ராஜ் மற்றும் திருவாரூர் வளர்ச்சி ஆலோ சனைக்குழும தலைவர் ரவிச்சந்திரன், செய லாளர் டாக்டர் செந்தில், கவுரவ ஆலோச கர் ஸ்ரீதரன் ஆகியோர் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை- நாகை இணைப்பு சாலையின் முக்கியத்துவம் குறித்தும், அதிகாரிகளால் புறக்கணிக்கப் பட்டு வரும் இப்போக்குவரத்து சாலை யின் அவலங்களை விளக்கியும் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி யும் மனு அளித்து பேசினர்.  இதன் எதிரொலியாக வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையின் இருவழி சாலைப் பணி கள் விரைந்து முடிப்பது தொடர்பாக ரூ.340.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் தேதி வரும் மார்ச்-14 என அறிவிக்கப் பட்டுள்ளதை திருவாரூர் வளர்ச்சி ஆலோ சனைக்குழும செயலாளர் டாக்டர் ரவிச்சந்தி ரன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.  மேற்படி சாலைக்கான திட்டப் பணி கள் விரைந்து தொடங்கப்பட்டு 2 வருட காலத்தில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை திருவாரூர் மக்களிடத்தில் நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. இருவழிச்சாலைப் பணிக்கு நாகை எம்பி செல்வராஜ் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சியின் காரணமாகத் தான் குறுகிய கால அவகாசத்தில் டெண் டர் அறிவிக்கப்பட்டுள்ளது என டாக்டர் செந் தில் கூறியுள்ளார்.