குடவாசல், ஜூன் 7- திருவாரூர் மாவட்டம், குடவாசலில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்ட டம் கட்டுவதற்கான துவக்க விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு (SCPAR) ஒன்று திரட்டப்பட்ட வருவாய் நீதி திட்டம் மூலம் 317.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் தமி ழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காம ராஜ் கலந்து கொண்டு பேசும்போது, காவிரி ஆணையத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், எந்த காலத் திலும் விவசாயிகளுக்கு வழங்கும் இல வச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டோம் என்று பேசினார். மாவட்ட ஆட்சியர் தா.ஆனந்த் தலை மையில் நாகை நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன், குட வாசல் ஒன்றிய குழு தலைவர் கிளாரா செந்தில், துணை தலைவர் ரா.தென்கோ வன், குடவாசல் வட்டார ஆணையர் இராதாகிருஷ்ணன், திட்ட ஆணையர் பொற்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய தலை வர் கிளாரா செந்தில் நன்றி கூறினார்.