தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் தமுஎகச கோரிக்கை ஏற்பு
சென்னை, அக். 2 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவை நடத்துகின்றன. இந்த விழா புதனன்று (அக்.2) சென்னையில் தொடங்கியது. மத்திய அரசின் தென்னக பண் பாட்டு மையம், மாநில அரசின் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இவ்விழாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கம் விழாவிற்கு வாழ்த்து மடலை அனுப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாடக விழா நடைபெறும் கிரிஷ் கர்னாட் (கேரள பள்ளி சமாஜம் பள்ளி) வளாகத்தை திறந்து வைத்து அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது: நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் 33 ஆயிரத்து 500 பேர் பதிவு பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நாடகக் குழுக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான குழுக்களை வெளிப் படைத்தன்மையோடு தேர்வு செய்ய பண்பாட்டு நுழைவாயில் (கல்சுரல் போர்ட்டல்) உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு சில சங்கங்கள் மட்டுமே பயனடையும் நிலையை மாற்றிட இனி அனைத்து தேர்வு களும் வெளிப்படையாக நடை பெறும்.
தமுஎகச போன்ற அமைப்பு கள் பங்குபெறும் வகையில் இயல், இசை, நாடக மன்றத்தில் மாற்றங்களை கொண்டு வரு வோம். பல இடங்களில் கலைகள் அழியாமல் பாதுகாப்பதில் தமுஎகச-வுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எந்தவித இசங்கள், சாயங்களில் சிறைபடாமல் மக்களுக்கான கலை என்ற உன்னத தத்துவத்துடன் தமுஎகச செயல்படுகிறது. முதல்முறையாக இந்தாண்டு முதல் தமிழக அரசு உலக நாடக தினத்தை கொண்டாட உள்ளது. தமுஎகச-வுடன் இணைந்து அந்த தினத்தை கொண் டாடுவோம் என உறுதியளிக்கிறேன்.
கலைஞர்கள் மீள் உருவாக்கம்
யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி நெட்வொர்க்கில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு தமுஎகச போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளும்தான் காரணம். இந்த தகுதி பாரம்பரிய கலைகளால் மட்டும் வரவில்லை. நாட்டுப்புறக் கலைகளாலும்தான் அந்த அங்கீ காரம் கிடைத்துள்ளது. யுனெஸ்கோ வுடன் இணைந்து கலைஞர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அழிந்து வரும் கலைகளை மீள் உருவாக்கம் செய்ய யுனெஸ்கோ ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து கலைஞர்களுக்கு நன்மையளிக்கும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இசைக்கருவிகள், உடைகள் வாங்க மாவட்டத்திற்கு 10 நாட்டுப் புற கலைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் அரசு வழங்குகிறது. அதை மேம்படுத்தி ஒரு குழுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளோம். இதை கலைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தமுஎகச செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து விழாக்குழுச் செயலாளர்- நாடகவியலாளர் பிரளயன் பேசுகையில், அங்கீ கரிக்கப்பட்ட நாடகக்குழுக்களுக்கு கேரளா, கர்நாடகாவில் குறைந்த வாடகையில் ஒத்திகை பார்க்க அரங்கம் தரப்படுகிறது. கர்நாடகா வில் 6 ஆயிரம் ரூபாய்க்கு தரு கிறார்கள். அதுபோன்று சென்னை யிலும் அரங்கம் வழங்க வேண்டும் என்றார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளிக்கையில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 2 அரங்கம் உள்ளது. ஒன்று இயல் இசை நாடக மன்ற அரங்கம். மற்றொன்று மீட்க வேண்டி யுள்ளது. நாடகக் குழுக்களை முறைப்படுத்தி, பகலில் ஒத்திகை மேற்கொள்ள அரங்கம் வழங்கப் ப்படும். கர்நாடகத்தை விட குறை வாக அல்லது அதற்கு நிகரான கட்டணத்தில் வழங்கப்படும் என்றார்.