tamilnadu

img

கரும்பு பாக்கியை கேட்டு தமுக்கு அடிக்கும் போராட்டம்

திருவண்ணாமலை, அக். 3- திருவண்ணாமலை மாவட்டம் போளூ ரில் கரும்பு பாக்கியை வழங்கக் கோரி விவ சாயிகள் தமுக்கு அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கே .பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி. பெருமாள், வி. சுப்பிரமணி, டி .கே. வெங்கடேசன், ப.செல்வன், அ. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 2018-19 ஆம் ஆண்டு அரவை செய்த  கரும்புக்கான பாக்கி ரூ. 55 கோடியை வழங்க  தரணி ஆலை-2 நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற  உத்தரவின்படி ரூ. 15 கோடியை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். வறட்சியால் தண்ணீர் இன்றி காய்ந்த கரும்புக்கு தேசிய  பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நிவார ணம் சரியாக வழங்க வேண்டும். விவசாயி கள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பும் சர்க்கரையும் ஒரே  எடை மேடையில் எடை போட வேண்டும், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர்.