tamilnadu

img

மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை, ஜூன் 18- வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை  சீற்றங்களால் பாதிப்பு, விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலையில்லை, இடு  பொருட்களின் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களிடம் உள்ள துண்டு, துக்கானி நிலங்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அவலம் ஆகிய வற்றால் விவசாயிகள் கடும் வேதனை யடைந்துள்ளனர். அரியலூரில் இருந்து வேலூர், திருவ லம் வரை உயர் மின்கோபுரங் கள் அமைக்  கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  பாதி பணிகள் முடிந்துள்ள நிலையில், அவ லூர் பேட்டை சாலையை மின் கம்பிகள் கடக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை(ஜூன்18) திரு வண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு ஊராட்சி குண்ணுமுறிஞ்சி கிராம பகுதிகளில் சிறு விவசாயிகளின் நிலங்களில் அனுமதி பெறாமல், டவர்களை இணைக்கும் பணி துவக்  கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:- எங்கள் ஊர் வழியாக உயர் மின் அழுத்தப்  பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இறுதிக் கட்டத் தில் உள்ளது. இழப்பீடு பற்றிக் கேட்டால், அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை. பவர்  கிரிட் நிறுவனத்தினர், எங்கள் நிலங்களுக் குள் அத்துமீறி நுழைந்து, காவல் துறையை  வைத்து மிரட்டி எங்களது அனுமதியின்றி, மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். எங்கள் நிலங்களில் உயர் அழுத்த மின்  கோபுரங்கள் மற்றும் மின் பாதைகள் அமைப்ப தால், அதற்கு கீழ் தொடர்ந்து வேலை  செய்யும் எங்களுக்கும், எங்களதுகுடும்பத்தா ருக்கும், கால்நடைகளுக்கும், கருவுற முடியா மல் போகும் சூழ்நிலை உருவாகிறது. மேலும்  பண்ணை விவசாயம் செய்ய முடியாமல் போகிறது. எனவே, எங்களது நிலத்தில் தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டு வரும், பவர் கிரிட் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதுவரை ஏற்படுத்திய சேதங்களுக்குஉரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். குண்ணு முறிஞ்சி பகுதியில், மின் கம்பி கள் இணைக்கும் பணியை தடுத்து நிறுத்தி  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் விவசாயி களை கேவலமாக பேசியதால் ஆவேசமடைந்த  விவசாயிகள் கண்ணன், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ்குமார் ஆகியோர் மின்  கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற னர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வர்கள் டி.கே.வெங்கடேசன், பலராமன், ராம சாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்  குமார், மூத்த தலைவர் எம்.வீரபத்திரன், ஒன்றி யச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் சம்பவ  இடத்திற்கு சென்று விவசாயிகளின் கோரிக்  கையை வலியுறுத்தி காவல் துறையினரிடம் பேசினர். இதையடுத்து, அப்பகுதியில் தொடங்கப் பட்ட மின் கம்பிகள் இணைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி, உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் என காவல் துறையினர் கூறியதையடுத்து, கம்பத்தில் ஏறிய விவசாயிகள் கீழே இறங்கி வந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.