tamilnadu

img

காதலித்து ஏமாற்றியதால் இளம் பெண் தற்கொலை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 21- காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்ப வத்தை, வன்கொடுமை தடுப்புச்  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  நல்லாட்டூர் கிராமம் ஆதிதிராவிடர் வகுப்பை  சேர்ந்தவர் மணிமேகலை (24). இவர் அரக்கோ ணத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப  கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரி யில் தாழவேடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்  (35) விரிவுரையாளராக பணிபுரிகிறார். இரு வரும் 4 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிமேகலை ராஜ்குமா ரின் வீட்டிற்கு சென்று வலியுறுத்தி உள்ளார்.  சாதியை சொல்லி திருமணத்திற்கு ராஜ்  குமார் மறுத்துள்ளார். மேலும், அவரது உற வினர்கள் மணிமேகலையை தாக்கியுள்ள னர். அங்கு வந்த திருத்தணி காவல் நிலைய  உதவி ஆய்வாளர் சுதாகரும் ராஜ்குமாருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மணிமேக லையின் பெற்றோரை அழைத்தும் அவ தூறாக பேசி மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து மணி மேகலை ஜூன் 13ந் தேதியன்று விடி யற்காலை உடலில் மண்ணெண்  ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மணிமேகலையின் மரணத்திற்கு  காரணமான ராஜ்குமார் மீது  புகார் அளித்தும் கனகம்மாசத்திரம் காவல்துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாவட்ட செயலாளர் த.கன்னி யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணி வட்டச் செயலாளர். ஏ.அப்சல் அக மது, மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, வழக்கறிஞர் ரீசர் உள்ளிட்டோர் மணிமேகலை யின் பெற்றோரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். மணிமேகலையின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து  கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்  வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்க வேண்டும் என தீண்  டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொரு ளாளர் இ.மோகனா வலியுறுத்தி உள்ளார்.