tamilnadu

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தைராய்டு உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து தட்டுப்பாடு

திருவள்ளூர், செப். 10-   திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனை, பொன் னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்த மல்லி,  திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய வட்டார மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை க்காக வந்து செல்கின்றனர்.  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தைராய்டு நோயால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த நோய்க்கான மருந்து கள் அரசு மருத்துவமனை களில் போதுமான அளவு இல்லை என்றும் கூறப்படு கிறது. அதேபோல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க ளுக்கு  மருந்துகள் இல்லை.  இதனால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது  மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும், நோய்கள் சாதாரண நிலையில் உள்ள போதே அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்கா லம் துவங்கியுள்ளதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். திருத்தணி அருகில் தாடூர் இருளர் காலனியில்  சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால், தமிழ்ச்செல்வி என்ற 2 வயது குழந்தை உயிரிழந்தது.  எனவே இதுபோன்ற சம்ப வங்கள் இனியும் நடக்கா மல் இருக்க மாவட்ட சுகா தாரத்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி சுகாதாரத் துறை இணை இயக்குனரி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் மனு அளித்துள்ளார்.