திருப்பூர், ஜூலை 21 - திருப்பூர் கட்டடப் பொறியாளர் கள் சங்கம் சார்பாக வாவிபாளையம் ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள சேடர்பாளையம் குளம் தூர்வாரும் பணி ஞாயிறன்று தொடங்கப்பட்டது. திருப்பூர் கட்டடப் பொறியாளர் கள் சங்கத் தலைவர் டி.ஆர்.சிவன் பாலசுப்பிரமணியம், செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி, துணைச் செயலாளர் அருண் ரமேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இதில் பங் கேற்று குளம் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தனர். ஏறத்தாழ 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் புதர் மண்டி செடி, கொடி கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. அத்துடன் இந்த குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதையும் அடைபட்டுள் ளது. புதர்களையும், குப்பை கூளங் களையும் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அகற்றி சுத்தம் செய்ததுடன், நீர் வழிப் பாதை அடைப்பையும் நீக்கி சரி செய்யும் பணி மேற்கொள் ளப்பட்டது. குளத்தின் மையப்பகுதி யில் மண்மேடுகளைச் செப்பனிட்டு ஆழப்படுத்துவதுடன், கரை பகுதி களையும் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜேசிபி இயந்திரங்கள் மட்டு மின்றி, லாரிகளும் வரவழைக்கப்பட்டு கூளங்களை அப்புறப்படுத்தவும், முழுமையாக தூர்வாரும் பணியை நிறைவேற்றவும் திட்டமிட்டு இப்பணி செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு நாளில் பணி நிறைவு பெறாது, முழுமையாக இக்குளம் தூர்வாரி முடிக்கப்படும் என்றும் சங்கச் செய லாளர் சௌ.ஸ்டாலின்பாரதி தெரி வித்தார்.