திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஊஞ்சப்பா ளையம் கிராமத்தில் கோழிப்பண்ணை கழிவுகளால் ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஊஞ்சப்பாளையம் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ஊஞ்சப்பாளையம் பகுதி யில் 3 தனியார் கோழிப்பண்ணைகள் இயங்கி வரு கின்றன.
இந்த கோழிப்பண்ணைகளில் இருக்கக் கூடிய கோழி கழிவுகளிலிருந்து அதிக அளவில் புழுக் கள் மற்றும் ஈக்கள் உற்பத்தி ஆகிறது. கோழி கழிவு களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என கோழிப்பண்ணையாளர்களிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக மூன்று முறை நேரில் சென்று வலியுறுத்தி யும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும், கோழிப்பண்ணைகளில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கூறப்பட்டுள்ளது.