அவிநாசி, அக். 19- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி யில் டெங்கு தடுப்பு சுகாதார பணிகள் நடைபெற்றது. பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இதன் ஒருபகுதியாக திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் பல்வேறு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது. ராக்கியாபாளையம் பகுதி யில் செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஊழி யர்கள் 118 பேர் பல்வேறு குழுக்களாக வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். இதில் அவினாசி பேரூராட் சியிலிருந்து 50 ஊழியர்களும் கலந்து கொண்டனர். இப்பணியில் வீடுகளில் பாத்திரங்களில் பிடித்து வைத்திருந்த குடிநீரில் டெங்கு கொசுப்புழு உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதிக அள வில் குடிநீர் சேமித்து வைக்க வேண்டாம் என்றும், குடிநீரை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வீடுகளிலும் குடிநீரில் மருந்து தெளிக் கப்பட்டதுடன், நீலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்தி வேல் தலைமையில் மருத்துவ குழுக்களை கொண்டு 6 இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. அந்த பகுதி முழுவதும் துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றுதல், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணி கள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரேவதி நர்சிங் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிர சுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.