tamilnadu

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அவிநாசி, ஜூன் 16- நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனை அகற்றும் பணி அவி நாசியில் நடைபெற்றது.  அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி பிரிவில் இருந்து ஆடையாம்பாளையம் பகுதி வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உணவகங்கள், மளிகைக்கடை உள்ளிட்ட கடைகள் ஆக் கிரமித்து உள்ளன. இது போக்குவரத் திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக  பொதுமக்கள் தெரிவித்தனர். இந் நிலையில் நெடுஞ்சாலைத்துறையின்  சார்பில் 6 மாதத்திற்கு முன்பு நோட்டீஸ்  கொடுக்கப்பட்டது. இதையடுத்து பழங் கரை பிரிவு அருகில் உள்ள சில உணவுக்  கடைகள் அகற்றாத நிலையில் இருந்தனர்.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்று மாறு உரிமையாளர்களிடம் கூறி வரு கிறோம். சில கடையில் அகற்றி வருகின்ற னர். அகற்றப்படாத கடைகளை நெடுஞ் சாலைத்துறை மூலமாக தற்போது அகற் றப்படுகின்றன.  மேலும், சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பதாகைகளும்  அகற்றப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.