court

img

யானை வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்.... இழப்பீட்டை உரிமையாளர்கள் தனிக்குழுவிடம்தான் கேட்க வேண்டும்... உச்சநீதிமன்றம் உத்தரவு...

புதுதில்லி:
யானை வழித்தடம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட  விவகாரத்தில் ரிசார்ட்  மற்றும் நில உரிமையாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டை அமைக்கப்பட்டுள்ள  குழுவிடம் தான் கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய  உத்தரவை எதிர்த்து, நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் உட்படபலர் தொடர்ந்த  மேல்முறையீட்டு வழக்கை  உச்சநீதிமன்றம் விசாரித்தது.  இந்த விவகாரத்தில்  உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது. மேலும், யானைகள்  வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை அகற்றும் பொழுது சட்டப்பூர்வமாக கட்டங்களை  வரைமுறைப்படுத்தவும், நிவாரணம் தொடர்பாக ஆராயவும் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இழப்பீடுகளை வழங்குவது உள்ளிட்ட சில விவகாரத்தில்  குழப்பங்கள் இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு ரிசார்ட் மற்றும் கட்டிட  உரிமையாளர்கள் ஆகியோர்சிலர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் நசீர் தலைமை யிலான அமர்வு முன்பு   விசாரணைக்குவந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இது தொடர்பாக உச்ச  நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவை தெளிவான உத்தரவை  பிறப்பித்துள்ளன. இந்த விவகாரத்தில் இழப்பீடுவழங்குவதை எல்லாம்  பற்றி கூறுவதற்கு நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. அதற்காகத்தான்  தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று தான் முறையிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்,’ என்று  தெரிவித்தனர். விசாரணை அடுத்த வாரத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.