tamilnadu

img

ஆதிச்சநல்லூர், சிவகளையில் இன்று அகழாய்வு தொடக்கம்

தூத்துக்குடி,மே 24- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளை  பகுதியில் அகழாய்வுப் பணிகள் மே 25 அன்று துவங்குகிறது.  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதி யில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப் படும் என்று  அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார். கொரோனா தடுப்பு ஊரடங்கால்  அகழாய்வுப் பணிகளை தொடங்க வில்லை.

இந்நிலையில் ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள்  மே 25 திங் களன்று முறைப்படி தொடங்குகிறது. தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தன் மேற்பார்வையில், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறையின் அக ழாய்வு இயக்குநர் ஜே.பாஸ்கரன் தலைமையிலான குழுவின ரும், சிவகளையில் அக ழாய்வு இயக்குநர் எம்.பிரபாகரன் தலைமையிலான குழுவினரும் இந்த பணிகளை செய்கின்றனர். இதற்காக இரு குழுவினரும் அந்தந்த இடங்களுக்கு வருகை தந்து தயார் நிலையில் உள்ளனர்.  இந்த அக ழாய்வு பணிகள்  செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.