tamilnadu

img

தர்கா கந்தூரி விழா

 கும்பகோணம்: கும்பகோணம் அரைக்காசு அம்மாள் தர்கா 487-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் புதன் இரவு நடைபெற்றது. பெண்களுக்கு திருமண தடை நீங்கும் இடமாக முஸ்லிம் மற்றும் அனைத்து மத பெண்க ளுக்கு நம்பிக்கையாக கும்பகோணம் அரைக்காசு அம்மாள் தர்காவிற்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில் 487 ஆவது ஆண்டு கந்தூரி விழா தொடங்கியது. கடந்த 7 நாட்க ளாக  உலக நன்மை வேண்டி சிறப்புத் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, புதன் இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தையொட்டி மாலை 6.30 மணியளவில் முத்தவல்லி ஷாஜஹான் தலைமை தாங்கி னார். இமாம் நஜிபுதீன்  தலைமையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் இரவு 9.30 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை  தர்கா நிர்வாகக்குழுவினர் மற்றும் அசாருதீன் ஆகியோர் செய்திருந்தனர்.