கிக் பாக்சிங் தேசியப் போட்டிக்கான தமிழக அணி தேர்வு சென்னையில் நடைபெற்றது. இதனை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.திருவளர் செல்வன் தொடங்கிவைத்தார். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்த்திஅருண்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் சி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 மாணவிகள் தேசிய பள்ளி விளையாட்டுப்போட்டிக்கான கிக் பாக்சிங் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.