சென்னை, ஆக.20- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரியில் அர சுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்தி ருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என ஆயுள் தண்டனை கைதிகள் உரிமை யாக கோர முடியாது என தெரிவித்திருந்தது. இது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் ஆயுள் தண்டனை என் றால் எஞ்சிய ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமி ழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 361-ன் படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மா னத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரி டம் விளக்கம் கேட்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.