திருவனந்தபுரம், ஜுலை 14- ரயில்வேயில் கேரள மாநிலத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.சுதாகரன் கேட்டுக்கொண்டார். கேரள மாநிலம் நிலம்பூ ரில் நடந்த நிலம்பூர்-கரு ளாயி சாலை புனரமைக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜி.சுதா கரன் பேசியதாவது: ரயில்வே வளச்சிப்பணி களில் மற்ற மாநிலங்களுக்கு உதவும்போது கேரளத்தை மட்டும் புறக்கணிப்பது ஜன நாயக விரோதம். கேரளத்தில் துவங்குவதாக அறிவிக்கப் பட்ட ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை உடனடியாக துவக்கப்பட வேண்டும். கேரள ரயில்வே கோட்டங் களை உள்ளடக்கிய ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும். பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலை கேரளத்தின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாகும். அதோடு திரு வனந்தபுரம், பாலக்காடு, கொங்கண் ரயில்வே கோட் டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்துக்கென ஒரு மண்டலம் அமைக்க வேண் டும் எனவும் வலியுறுத்தி மத் திய அரசுக்கு ஏற்கனவே கடி தம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வேக்கு தேவையான பெட்டிகள் தயாரிக்க புதியதாக ஒரு ரயில்பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கு வாய்ப் பில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மண்டலம் அமைக்க முடி யாது என்கிறமத்திய அரசின் முடிவும் கேரளத்தை புறக்க ணிப்பதாகும். இதுபோல் நிலம்பூர்-நஞ்சன்கோடு பாதையும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என ஜி.சுதாகரன் தெரிவித்தார்.