சென்னை, மே 6- தமிழகத்தில் சுமார் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான 3 முக்கிய, சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள், தற்போது கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப் பட்டுள்ள தளர்வுகள் காரணமாக மீண்டும் தொடங்க உள்ளது. அதன்படி, திருச்சி-சிதம்பரம் சாலையை கல்லகம் வரை யில் நான்கு வழி சாலையாக மாற்றுவதற் கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மீன்சுருட்டி - சிதம்பரம் இடையே இரண்டு சாலைகளை விரிவாக்கம் செய்வ தற்கான பணிகளும், புலம் பெயர் தொழி லாளர்கள் இல்லாததால் உள்ளூர் ஆட் களை கொண்டு மேற்கொள்ளப்பட உள் ளது. இதேபோன்று திண்டிவனம்-கிருஷ்ண கிரி மற்றும் பொள்ளாச்சி - கோயம்புத் தூரை இணைக்கும் சாலைகளை மேம்ப டுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.