இளம்பிள்ளை, மே 31 - கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையிழந் துள்ள உரல் வேலை செய்யும் தொழி லாளர்கள், தங்களுக்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து இளம்பிள்ளையில் உரல் வேலை செய்யும் தொழிலாளர் கள் கூறுகையில், தமிழகத்தில் மிக சொற்ப அளவிலே உரல் வேலை செய் யும் தொழிலாளர்கள் உள்ளார்கள். ஆண்டு தோறும் திருமண விசேஷ நாட்களில் விற்பனையாகும் ஆட்டுக் கல், அம்மிக்கல் மூலம் வரும் வருமா னத்தை வைத்து ஆண்டு முழுவதும் சமாளித்து வருகிறோம். தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று காரண மாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங் கால் நாங்கள் வேலையிழந்து உள் ளோம்.
கடந்த இரண்டு மாதங்க ளாகவே திருமண விசேஷங்களுக்கு கட்டுப்பாடு நீடித்து வருவதால் நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் உரல்கள் விற்ப னையாகாமல் வரு வாய் இன்றி தவித்து வருகின் றோம். இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் கூட்டமாகக் கூட தடை நீடிக்கிறது. மேலும், திருமண நிகழ்ச்சி கள் பழையபடி நடக்க சுமார் ஓராண்டு காலத்திற்கும் மேலாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ் வாதாரம் முற்றிலுமாக பாதித்து பட் டினி கிடக்கும் நிலைமையில் உள்ளோம். எனவே ஊரடங்கால் வேலையிழந்துள்ள உரல் செய்யும் அனைத்து தொழிலாளர் குடும்பங்க ளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.