tamilnadu

தனியார் பேருந்தில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினா்

சேலம், பிப்.19- சேலத்தில் தனியார் பேருந்தில் திடீ ரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனை வரும் உயிர் தப்பினா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி யைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவருக்குச் சொந்தமான பேருந்து வேம்படிதாளம் முதல்  நகரப் பேருந்து நிலையம் வரை இயக்கப் படுகிறது. இதனிடையே, செவ்வாயன்று காலை 9.15 மணிக்கு வேம்படிதாளம் பகுதி யில் இருந்து சேலம் நகரப் பேருந்து நிலை யத்தை நோக்கி இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். பேருந்து சிவதாபுரம் பகுதியைத் தாண்டி கந்தம்பட்டி  பகுதிக்கு வந்தபோது, பேருந்தின் அடிப் பகுதியில் இருந்து புகை வந்தது. அதை அறியாமல் சிறிது தூரம் பேருந்து இயக் கப்பட்டதது. பின்னர் புகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநா் உடனடியாக பேருந்தை கந்தம்பட்டி மேம்பாலத்தின் அருகில் நிறுத்தினார். உடனே பேருந்து ஓட்டுநரும், நடத்து நரும் இணைந்து பேருந்தில் இருந்த பய ணிகளை அவசர அவசரமாக வெளியேற்றி னா். இதற்கிடையே, பேருந்தில் பற்றிய தீ  அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவ தும் பரவியது. சூரமங்கலம் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்படவே, தீய ணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரப் போராட் டத்துக்குப் பிறகு தீ முழுவதுமாக அணைக் கப்பட்டது.  இந்த தீ விபத்தில் பேருந்தில் உள் பக் கம் முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டது. இது தொடா்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.