சேலம், டிச.1- நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பணியி டங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சேலம் சிஐடியு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ப. இராசா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் வட்டக்கிளை தலைவர் கா.கலியபெருமாள் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ராஜி, மாவட்ட பொருளாளர் இரா. காந்திமணி ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருகப்பெரு மாள், மாவட்டச் செயலாளர் சுரேஷ், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உத யகுமார், இளநிலை கட்டளை நிறை வேற்றுநர் சங்க மாநில செயலாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.செந்தில்குமார், முன்னாள் மாநிலத் தலைவர் சி.முரு கேசன், பி. கருணாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக இக்கூட்டத்தில் நீதி மன்றத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். சேலம் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள் ளது. இதனை உடனடியாக நிரப்பிட வேண்டும். விடுமுறை நாட்களில் நீதித்துறை ஊழியர்களுக்கு கட்டாய பணி வழங்கக்கூடாது. மாலை 6 மணிக்கு மேல் பணி வழங்கக் கூடாது. குறிப்பாக இரவு 8 மணி வரை பெண்க ளுக்கு பணி வழங்கக் கூடாது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.