சேலம், பிப்.12- தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக் கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா போட்டிகள் (கிரிவாஸ்’2020) வருகின்ற மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதி சேலம் சோனா கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப போட்டிகள், புகைப் படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவு களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இப் போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனி யார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கல்லூரி மாணவர்களின் தனி திறன் களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப் படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு களுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை கல்லூரி மாண வர்கள் பயன்படுத்திக்கொள்மாறு சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர். செந்தில்குமார் தெரிவித்தார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேணுகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.