சென்னை, மே 8- சிப்காட் தொழில் வளாகத்தில் 294 நிறுவனங்கள் தங்கள் செயல் பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளதாக சிப்காட் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிகள் தளர்த்தப்பட்டதில் இருந்து படிப்படியாக நிறுவனங்கள் செயல்பாட்டை தொடங்கி வருகின்றன. 294 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் செயல் பாட்டைத் தொடங்கியதாக சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் ஒரு சில நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 127 நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரகடம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் வளாகங்களில் தலா மூன்று தொழிற் சாலைகள் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளன. மேலும் இருங்காட்டுக் கோட்டையில் 32 தொழிற் சாலைகள், சிறுசேரி யில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள 19 சிப்காட் வளாகங்களில் 45 ஆயிரத்து 867 தொழிலாளர் கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.