பொன்னமராவதி, செப்.29- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் நடைபெற்றது. வட்ட கிளை தலைவர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட தலைவர் சுப்பையா சிறப்புரையாற்றினார். வட்ட செயலாளர் காடப்பிள்ளை முன்னிலை வகித்தார். மாநாட்டில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற பத்தாண்டு என்று இருப்பதை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட பொருளாளர் சின்னதுரை நன்றி கூறினார்.