tamilnadu

இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை

 புதுக்கோட்டை, ஆக.25-  புதுக்கோட்டை வீதி அமைப்பின் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கவிதை, சிறுகதை வாசிப்பு, இசைப் பாடல்கள் என நடைபெற்றது. கூட்டத்தில் வீதி அமைப்பும், கணினி தமிழ்ச் சங்கமும் இணைந்து இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையை வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்துவது என திட்டமிடப்பட்டது.  இதுகுறித்து நா.முத்துநிலவன் தெரிவித்தது: கணினி எளிய அறிமுகம், தமிழில் தட்டச்சு பயிற்சி, வலைப் பக்கம் உருவாக்குதல், முகநூல், வாட்சப் செயல்பாடு, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பயிற்சி உள்ளிட்ட 17 பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் முனைவர் நா.அருள்முருகன், திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், சென்னை ராசாராம், என்னாரெசுப் பெரியார், காஞ்சிபுரம் சிவ.தினகரன், தஞ்சை ஜம்புலிங்கம் உள்ளிட்ட வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர் இரண்டு நாள் தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட செலவுக்காக ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும்.(மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணம் ரூ.100 மட்டும்) முன்பதிவு செய்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், விபரங்களுக்கு 94431-93292 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார். முன்னதாக தென்றல் வரவேற்க, மு.கீதா நன்றி கூறினார்.