புதுக்கோட்டை, நவ.4- புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.195.66 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையு டன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: சமூகநலத்துறையின் கீழ் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்க ளின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயி ரமும், பட்டம் மற்றும் பட்டயம் முடித்த பெண்களின் திரு மணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 35,496 பெண்களுக்கு ரூ.123.21 கோடி மதிப்பீட்டில் திருமண நிதிஉதவி தொகையும், ரூ.72.45 கோடி மதிப்பீட்டில் 181.992 கி.கிராம் தாலிக்கு தங்கமும் என மொத்தம் ரூ.195.66 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள் ளார்.