tamilnadu

img

கொரோனா வைரஸ் காய்ச்சல்: மக்கள் அச்சப்பட தேவையில்லை பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர், மார்ச் 12- பொது சுகாதாரம் மற்றும்  நோய் தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பெரம்ப லூர் மாவட்டத்தில் கொரோ னா வைரஸ் காய்ச்சல் பர வாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வே ண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்த மாவட்ட  அளவிலான ஒருங்கிணைப்பு க்குழு கூட்டம் மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட ஆட்சித்த லைவர் வே.சாந்தா தலைமை யில் மார்ச் 12 அன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: கொரோனா வைரஸ் நோ யின் அறிகுறியானது காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல்சோர்வு, ஒரு சில ருக்கு மூச்சுத்திணறல்  போன்றவை ஏற்படும். கொ ரோனா வைரஸ் நோய் அறி குறிகள் கண்ட நபர் இரு மும்போதும், வெளிப்படும் நீர்திவலைகள் மூலம் நேரடி யாக பரவுகிறது. மேலும் இரு மல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படி ந்துள்ள பொருட்களை தொ டும்பொழுதும், கைகள் மூல மாகவும் பரவுகிறது.   எனவே, பொதுமக்கள் அனைவரும் இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை வைத்து இரும வேண்டும். தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு நன்கு கை களை தேய்த்து கழுவ வேண்டும்.  சிகிச்சை தரும்  அனைத்து மருத்துவமனை களிலும் கிருமிநாசி கொ ண்டு சுத்தமாக துடைத்து பரா மரித்தல் வேண்டும்.  சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெ ன்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.  இளநீர், ஓ. ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகார ங்களை பருகுதல் வேண்டும். மேலும், கொரோனா வைரஸ்  சந்தேகம் அறிகுறி உள்ள வர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில்  தனி வார்டு அமைக்கப்பட்டு ள்ளது.  அங்கு அவர்களுக்கு  முறையாக சிகிச்சை அளிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மரு த்துவ மனைக்கு அழைத்து வர பிரத்யேக வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் 24 நேர மும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு  மருத்துவத்துறை சார்பில்  கொரோனா வைரஸ் காய்ச்சல்; தடுப்பு நடவடி க்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. எனவே,கொ ரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யா ரும் அச்சப்பட தேவையில்லை.  இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார்.