கொல்கத்தாவில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
கொல்கத்தா, அக்.19- அவசர நிலைக் காலத்தில் இருந்த தைப்போல, வெகுஜன முன்னணிகள் இப்போது தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழுக் கூட்டம் கொல்கத்தா வில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. வெள்ளியன்று மாநிலக்குழுக் கூட்டத்தின் நிறைவாக சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
எதிர்காலத்தில் நம் போராட்டம் என்பது ‘இந்து தேசியவாதத்திற்கும் இந்தியன் தேசிய வாதத்திற்கும் இடையேயானதா கும்.’இப்போது நம்முன் உள்ள அவசரக் கடமை என்பது அவசரநிலைக் காலத்தில் இருந்ததைப்போல, “வெகுஜன மேடை கள்” (“mass platforms”) அமைப்பதாகும். இப்போது நமக்குத் தேவை உண்மை யில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்வது என்பதல்ல. மாறாக நமக்கு இப்போது தேவை வெகுஜன மேடைகளாகும். அவசர நிலைக் காலங்களில் பல புகழ்பெற்ற நீதிபதிகள் போன்றோரால் தலைமை தாங்கி யது போன்று குடிமை உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் அல்லது ஜனநாயக உரி மைகளுக்கான மக்கள் ஒன்றியம் (PUCL- People’s Union for Civil Liberties or PUDR- People’s Union for Democratic Rights) போன்று இப்போது அமைக்கப்பட வேண்டும்.
இன்றையதினம் நாட்டின் நிலைமை அவசரநிலைக் காலத்தில் இருந்ததைவிட மிகவும் மோசமானதாகும். அப்போது அர சமைப்புச்சட்டத்தின் மூலமாக அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத அவசரநிலை இருந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது முழுமை யான அளவில் உருமாற்றம் நடந்துகொண்டி ருக்கிறது. அதாவது, இந்திய தேசியவாதம், இந்து தேசியவாதமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கெதிராக அனைத்துத்தரப்பி னரையும் விரிவான அளவில் ஒன்றுதிரட்டி, மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கான பணியை இடதுசாரிகள் தொடங்கி இருக்கி றார்கள். இதற்காக இதர பிரிவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாவது ஆண்டு துவக்க விழாக் கொண்டாட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விழா விற்கு மக்கள் திரண்டெழுந்து வந்திருந்தது இதனைத் தெரிவிக்கிறது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசி னார்.
(ந.நி.)