tamilnadu

img

மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை: தமிழக அரசு

புதுதில்லி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் (CWRC) 26-ஆவது  கூட்டம்  அக்குழுவின் தலைவர்  நவீன்குமார்தலைமையில் பிப்ரவரி 25 செவ்வாயன்று தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர்  ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழுதலைவர்  சுப்பிரமணியன், காவிரி தொழில்நுட்பக்குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டலஉதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகளை சுட்டிக்காட்டியிருக்கும் தமிழக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.