புதுதில்லி, நவ.3- மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீர் இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதே சங்களாக சிதைதத்து. இந்நிலை யில், முன்பு 14 மாவட்டங்களாக இருந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது 28 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைகளை விளக்கும் வகையில் புதிய வரைபடம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ளது. குப்வாரா, பன்டிப்பூர், கன்டேர்பல், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, சோபியான், குல்காம், ரஜோரி, ரம்பான், டோடா, கிஷ்த்வார், சம்பா, கார்கில் ஆகியவைபுதிய மாவட்டங்களாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் முசாரா பாத் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்கு டனும் இணைக்கப்பட்டுள்ளது.