tamilnadu

இந்திய எல்லை பகுதியில் 20 அடி நீளச் சுரங்கம்

ஜம்மு, ஆக.29- இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 170 மீட்டர் தொலைவில் சுரங்கம் ஒன் றின் வாய் பகுதியை எல்லை பாது காப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கண்டறிந்துள்ளனர். அதன் விட்டம் 3 முதல் 4 அடி வரை உள்ளது. இந்த சுரங்கம் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையை நோக்கி 20 அடி நீளத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது. அது ஜம்மு, காஷ்மீரின் சம்பா பகுதியில் முடிவடைகிறது. சுரங்கம் தெரியாமல் இருப்பதற்காக அதன் வாய் பகுதியில் ஷகர்கார் மற்றும் கராச்சி ஆகிய பெயர்களால் எழு தப்பட்ட மணற்பைகள் கொண்டு மூடப்பட்டு உள்ளன. இதுகுறித்து எல்லை பாது காப்பு படை ஐ.ஜி. ஜம்வால் கூறு கையில், அந்த மணற்பைகளில் பாகிஸ்தானின் குறியீடுகள் உள் ளன. இதிலிருந்து அவர்கள் முறை யாக திட்டமிட்டு முயற்சிகளை மேற் கொண்டு குழி தோண்டியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அந் நாட்டு படைகள் மற்றும் பிற அமைப்பு களின் ஒத்திசைவு மற்றும் ஒப்பு தல் இன்றி இதுபோன்ற ஒரு பெரிய சுரங்கம் அமைப்பது முடியாது. இதுபற்றி பாகிஸ்தானிய அதிகாரி களிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்படு வதுடன், நடந்த குற்றத்திற்கு எதி ராக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்படும் என கூறியுள்ளார்.