tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்

34ஆவது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பில் வட சென்னை திருவொற்றியூர் எண்ணூர் பகுதியில் பகுதி தலைவர் திருமணி செல்வன் தலைமையில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன், பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் செல்வகுமாரி, மகேந்திரன், ஆதிகேசவன், ஜெயந்தி, சாரதி, கீதா, சசிகுமார், குருமூர்த்தி, ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.