மோடியை விமர்சித்ததற்காக இளைஞரை கைது செய்த உ.பி. பாஜக அரசு
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கோராக்பூர் மடத்தின் சாமியார் உள்ளார். இந்நிலையில், முசாபர்நகரில் பிர தமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதாக 22 வயது இளைஞர் ஒரு வரை உத்தரப்பிரதேச காவல்துரை ஞாயி றன்று கைது செய்துள்ளது. இதுதொடர் பாக சார்தாவால் காவல் நிலைய அதிகாரி சத்யநாராயண் தஹியா,”கைது செய்யப் பட்டவர் ஜிதேந்திர குமார் காஷ்யப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காஷ்யப் மீது பிஎன்எஸ் கீழ் 352 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கில்), 353 (பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்) உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது” என அவர் கூறினார். தற்போது கைது செய்யப்பட்ட காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட் டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. காஷ்யப் பிரதமர் மோடியை எந்த வகையில் விமர்சித்தார் என்பது தொடர்பாக செய்திகள் வெளியாக வில்லை என்றாலும், இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.