tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்க!

மயிலாடுதுறை, அக்.6 - மயிலாடுதுறையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரி மாநில அளவிலான கருத்தரங்கம் ஆர்.ஓ.ஏ கட்டிடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஏ.சேவி யர் செல்வக்குமார் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில், சங்கத்தின் தஞ்சை  மண்டல தலைவர் முனைவர் ஜெ.கோகுல கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல செயலாளர் பிரகாஷ்ராஜ்  வரவேற்றார். சங்கத்தின் தஞ்சை மண்டல  முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற பேரா சிரியர் மரியலாசர் சிறப்புரையாற்றினார்.  கருத்தரங்கை வாழ்த்தியும், தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து குறித்து விளக்கியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.ஸ்டாலின், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ப.மணிபாரதி ஆகி யோர் உரையாற்றினர். ஏராளமான பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். பொரு ளாளர் ஸ்ரீதர் தங்கத்துரை நன்றி கூறினார்.