districts

img

தோகைமலை ஒன்றியச் செயலாளராக எ.சுப்பிரமணி தேர்வு

கரூர், அக்.6 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய 10 ஆவது மாநாடு தோகைமலையில் நடை பெற்றது.  மாநாட்டிற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ஹரிராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சக்திவேல் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார்.  தோகைமலை கிளை செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். தோகை மலை ஒன்றியத்தின் புதிய  செயலாளராக எ.சுப்பிர மணி மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப  சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். காவிரி ஆற்றில் மழை காலத்தில் உபரி நீராக செல்லும் நீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து பஞ்சப்பட்டி ஏரி வழியாக தோகைமலையில் உள்ள குளங்களில் நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.