districts

img

குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளராக எஸ்.கலைச்செல்வன் தேர்வு

புதுக்கோட்டை,  அக்.6 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டம் குன் றாண்டார்கோவில் ஒன்றி யச் செயலாளராக எஸ்.கலைச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் குன்றாண்டார் கோவில் ஒன்றிய மாநாடு அண்டக்குளத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. தோழர்கள் பி.மருதப்பா, பி.முனியய்யா ஆகியோர் நினைவரங்கில் நடைபெற்ற  மாநாட்டிற்கு ஆகியோர் எஸ்.பீமராஜ், எஸ்.பெரு மாள், எம்.மகாலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்த னர்.‌ மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் வேலை  அறிக்கையை முன்வைத் தார்.‌ ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். புதிய ஒன்றியக் குழுவை அறிமுகம் செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் நிறைவு ரையாற்றினார்.  தேர்வு செய்யப்பட்ட 13 கொண்ட ஒன்றியக் குழுவின் செயலாளராக எஸ்.கலைச் செல்வன் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.