சென்னை,பிப்.1- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீர மைப்புக்கு ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சித்துறை இயக்கு நர், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்துக்கு மாநில அரசு ஒதுக்கிய ரூ.250 கோடியில் ரூ.187.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ள தாகவும், இத்திட்டத்தில் தினசரி ரூ.8 முதல் ரூ.10 கோடி செலவினம் உள்ள தால், தேவையான நிதியை வைத்தி ருக்க வேண்டி இருப்பதாகவும், எனவே மீதமுள்ள ரூ.62.50 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார். இக் கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.62.50 கோடி நிதியை இறுதி தவணையாக ஒதுக்கி உத்தர விட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.