tamilnadu

img

கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில்  தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! 

போலீசார்  உள்ளிட்ட  11  குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!

கடலூர், ஏப். 28 - கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கில் போலீசார் உள்பட 11 குற்றவாளி களின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி ஆணவக் கொலைகளுக்கு எதி ரான போராட்டத்தில், இந்த வழக்கின் தீர்ப்பு, வரவேற்கத்தக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் காலனியைச் சேர்ந்த முருகேசன் (25) மற்றும் கண்ணகி (22) இருவரும் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்தனர்.  இதனை ஏற்க மறுத்த கண்ணகியின் குடும்பத்தினர், 2003 ஜூலை 8 ஆம் தேதி, இருவரையும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப் பேட்டை முந்திரித்தோப்பில் வைத்து, மூக்கு  மற்றும் காது வழியாக விஷம் செலுத்திக் கொலை செய்ததோடு, இருவரின் உடல்களையும் எரித்துத் தடயங்களை அழித்தனர்.  இந்த வழக்கில் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்ட விருத்தாசலம் காவல்துறை, குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப் பட்டோர் என இருபக்கமும் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயன்றனர். இந்த வழக்கில் நியாயமான விசாரணை  நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பலகட்டப் போராட்டங்களை நடத்தியது.  இந்த வழக்கில், கொல்லப்பட்ட முரு கேசனின் தந்தை சாமிக்கண்ணுவும் குற்ற வாளியாகச் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 2004-ஆம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொடூரமான ஆணவக் கொலையில் ஈடுபட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மட்டுமல்லாமல், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  சிபிஐ விசாரணையின் அடிப்படை யில், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பளித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் (எஸ்.சி, எஸ்.டி சிறப்பு  நீதிமன்றம்), ஆணவக் கொலையில்  ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையின ருக்கும் தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை வழங்கியது.  இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறை யீட்டை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், உதவி ஆய்வாளருக்கு தண்டனை யைச் சற்றுத் தளர்த்தினாலும், டி.எஸ்.பியாக இருந்த செல்லமுத்துவின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, மற்ற குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்ட னையை உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை திங்களன்று (ஏப்.28) விசாரித்த உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களை உச்சதள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகள் 13 பேர்களில் 2 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.