tamilnadu

img

திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர், மே 14 -  தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத் தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை கால தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி தொடங்கி  வைத்து, வெள்ளரி, முந்திரி, தர்பூசணி, மோர், சர்பத், நுங்கு, இளநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட  கழக பொறுப்பாளர் டி.பழனிவேல், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுசாமி, மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் வி. சௌந்தரராஜன், திமுக அரசின் 5 ஆண்டு சாதனைகள்  பற்றி விளக்கி கூறினார். முன்னாள் மாவட்டக் கவுன்சி லர் அலிவலம் மூர்த்தி, முன் னாள் துணை பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பொதுக்குழு உறுப்பினரும் தலை மைக் கழக பேச்சாளருமான அப்துல்மஜீத், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் டி. பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள்,  மருத்துவ அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு முதல்நிலை ஒப்பந்தக்காரர் சி.துரைராஜ் செய்திருந்தார்.