tamilnadu

தனியார் பராமரிப்பில் தெருவிளக்கு இருளில் மதுரை மாநகர் மக்கள்

மதுரை மாநகராட்சியில்  100 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் தெருக்களில் பொருத் தப்பட்டுள்ள டியூப் லைட், சோடி யம் விளக்குகளை அகற்றிவிட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக எல்.இ.டி. விளக்குகள் (20 வாட்ஸ் முதல் 90 வாட்ஸ் வரை) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதை தனியார் நிறுவனமொன்று ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. ஒரு வார்டில் குறைந்தது 200 முதல் அதிகபட்சம் 300 விளக்கு கள் வரை உள்ளன. முன்பு இந்தப் பணிகளை மாநகராட்சியே செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.  தனியார் நிறுவனம் பொருத்தும் எல்.இ.டி.விளக்குகள் அதிகபட்சம் ஒருவாரம் மட்டுமே எரிகிறது என்ற புகார் பரவலாக எழத்தொடங்கி யுள்ளது. அனுப்பானடி 54-  ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜின்னா தெரு, பழனி தெரு, ஆசாத் தெரு, தேவன் தெரு பகுதிகளில் புதிதாக பொருத் தப்பட்ட 25 எல்இடி விளக்குகள் எரியவில்லை. மாடக்குளம், பழங்கா நத்தம், மாடக்குளம் மெயின் ரோடு, கீழத் தெரு, மேலத் தெரு, வடுகச்சி யம்மன்கோவில் தெரு, பெரியார் நகர், தண்டல்காரன் பட்டி, வடக்கு தெரு, பசும்பொன் நகர், ஜெய்ஹிந்த் புரம் 89, 90, 91, 92 வார்டுகளுக்கு உட்பட்ட ஜீவா நகர்  2-ஆவது தெரு, கோவலன் நகர், மீனாம்பிகை நகர், பாரதியார் மெயின் ரோடு கடைசி, வீரகாளியம்மன் கோவில்தெரு, புலிப்பாண்டி தெரு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை. இது குறித்து மக்கள் அதிகாரி களுக்கு தெரிவித்தால், தெரு விளக்குகள் பராமரிப்பு தனியா ருக்கு விடப்பட்டுள்ளது என்கின்ற னர். தனியார் நிர்வாகப் பொறுப்பா ளர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. தனியார் நிறுவனம் பொருத்தும் எல்இடி விளக்குகள் தரமற்றதாக உள்ளது.  மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் 20 வாட்ஸ் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அவை அதிக வெளிச்சத்தை உமிழ்வ தில்லை. வீடுகளுக்கு பொருத்தப் படும் பல்புகளை தெருக்களுக்கு பொருத்துவது சரியல்ல என்கின்ற னர் விஷயமறிந்த அதிகாரிகள். குறைந்த அளவு வெளிச்சத்தை உமிழும் விளக்குகளைப் பொருத் துவதால் தெருக்கள் இருளில் உள்ளது போல்தான் உள்ளது. எனக்கூறும் மக்கள் அதிக வெளிச்சத்தை உமிழும் கூடுதல் சக்தி கொண்ட பல்புகளை பொருத்த வேண்டுமென்கின்றனர் மக்கள் பலம் வாய்ந்த ஆளும் கட்சி பிர முகர்கள் தாம் வசிக்கும் பகுதியில் அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய பல்புகளை பொருத்துகின்றனர் என்ற தகவலும் உள்ளது.  மாநகராட்சி தெரு விளக்கு களை பராமரித்த போது புகார் கொடுக்கப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும். அது இப்போது தனியாருக்கு சென்று விட்டதால் கண்டும் காணாத நிலை உள்ளது. தெருவிளக்குகள் எரிந்தும் பயன் ஏதுமில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல் லப் போகிறார்கள் அதிகாரிகள். நமது நிருபர்